Friday, December 08, 2006

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!

மனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்
..
என்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.

இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.

அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?

உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.

உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.

இறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம்.
நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.

தெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.

அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.
எனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..

இந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

முடிவாக..

இந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.

இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.

உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.

அன்புள்ள நண்பர்களே,

உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து, 6 வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.

இந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.

நன்றி தியாகு

--
இந்த மிகச்சிறப்பான கட்டுரையை பின்னூட்டமாக எழுதி அளித்து அதனை தனி பதிவாக வெளியிட அனுமதித்த தியாகு அய்யா அவர்களுக்கு நன்றி

எழுதியவர்: எழில் at Tuesday, December 05, 2006

Wednesday, December 06, 2006

உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.
உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.
மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.
சிங்கமே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

மணவாளனே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

படுக்கையறையில், தேன் சொட்ட
உன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.

சிங்கமே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.
என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.
என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.

உன் ஆன்மா-
உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
மணவாளனே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.
உன் இதயம்-
உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
சிங்கமே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.

நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.
என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,
என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,
நீ என்னை தீண்டி அருள்வாய்.

உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.
உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.
உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.
கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.

- காமமும் காதலும் ததும்பும் இந்த பாடல்தான் இதுவரை உலக இலக்கியம் கண்ட முதல் காதல் பாடல்.

இந்த கவிதைதான் உலகில் இதுவரை நாமறிந்த காதல் இலக்கியங்களிலேயே மிகவும் பழமையான படைப்பு. இன்றைய ஈராக்கில் - அன்றைய மெசபடோமியாவின் நிப்பூர் என்ற நகர் இருந்த பகுதியில்- 1880 இல் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு டேப்லட்டில் இந்த கவிதை காணப்பட்டது.

அது சுமேரியர்களின் மொழியில் கியூனிபாஃர்ம் எனப்படும் ஆதிகால வரிவடிவத்தில் எழுதப்பட்டது. இப்போது இப்போது துருக்கியில் இஸ்தான்புல் மியூசியமான The Museum of the Ancient Orient இல் இருக்கிறது.

Thursday, November 30, 2006

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்)
பாடல்: நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்

Saturday, July 22, 2006

பூபாளம் கூடாதென்னும் வானம்... அவள்!

மன்றம் வந்த தென்றலுக்கு,
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
(மன்றம்)
தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!
(மன்றம்)
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல,
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல!
ஓடையைப் போலே உறவும் அல்ல,
பாதைகள் மாறியே பயணம் செல்ல!
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!
(மன்றம்)

அழகான மனைவி...அன்பான துணைவி!

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)
வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!
(கல்யாணமாலை)

புரட்சித் திருமணத் திட்டம்

நடத்தும் முறை

திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப் பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர் புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல! மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.

2. இசை: திராவிட நாட்டுப் பண்.

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன், என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, நாங்கள் ஆதரிக்கிறோம், என்று வழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்:

மணப்பெண், இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன், என்று சொல்லல்.

மணமகனும் அவ்வாறு சொல்லல்.

அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். வாழ்க என முழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை:

அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.

இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.

இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில் ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும் பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது. இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம். ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்? - பாரதிதாசன்

1 அவையத்தார்

அகவல்

வருக வருகென மலர்க்கை கூப்பித்
திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே!
குழலும் முழவும் பொழிந்த இன்னிசை
மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன்
மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்
திராவிட நாட்டுப்பண் பாடினான்;
ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே.
மணமக்கள் வருகை
மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்
தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது
யுஇருக்கரு என்று தோழர் இயம்ப
இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.


2. முன் மொழிதல்

மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்
முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்:
புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்.
இன்று நடைபெற இருக்கும் இத் திராவிடர்
புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்
தலைமை தாங்கவும் நிலைமை உயர
மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம்
நிறைவேற் றவும்பெரி யாரை
முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.

வழி மொழிதல்

அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்,
புமுன்மொழிந் தாரின் பொன்மொழி
நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.
வேண்டுகோள்
முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும்
பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,
எழுந்தருள் கென்றே இருகை கூப்பி
மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த
இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்
பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:


3 அவைத்தலைவர்

சேர சோழ பாண்டியர் வழிவரு
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து
ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்.
ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்
ஆதலால், அவரின் வேத மந்திரம்
தீது பயப்பன ஆதலால், திராவிடர்
வாழு மாறு மனங்கொளார் என்பதும்,
தாழ இன்னலே சூழுவார் என்பதும்,
அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,
நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம்
நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே
தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை
மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில்
இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்
ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை
வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ?
அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய
தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க
வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு
தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா?
தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர்
தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர்
ஒருமனப் பட்ட திருமண மக்களைப்
பெரிதின்பம் பெறுக பெறுக என்று
வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்
ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?
ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து
வாழையடி வாழையாய் வந்த திராவிடர்
சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி
ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை?
நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக்
கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்?
மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில்
கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ?
தீதிலா மிகப்பல திராவிட மறவர்
ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த
சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன?
கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன?
மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்
தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்!
இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக்
கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்!
தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில்
தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்!
நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்!
திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை?
வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்
தமிழர் பண்பு தலைசா யாதோ?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்
திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?
திராவிடர் புரட்சித் திருமணம்
புரிந்தின் புறுக திருமண மக்களே!

வாழ்க்கை ஒப்பந்தம்
ப·றொடை வெண்பா
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக -
நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான்.

"பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள
* பாவையீரே - மணமகளாரே.

ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக்
கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள
உறுதி உரைப்பீரோ?" என்று வினவ,
உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும்.
"தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ?
* தோழரே - மணமகனாரே

வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ?
ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே,
தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட
வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!
வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்!
தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட
நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக்
கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித்
துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும்
தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!

செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:

அற மொழிகள்

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது" என்றார் வள்ளுவனார்.
இல்வாழ்வில் அன்பும்
அறமும் இருக்குமெனில்
நல்லதன்மை நல்லபயன்
நாளும் அடையுமன்றோ?
"மனைத்தக்க மாண்புடையாள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்
துணை" என்றார் வள்ளுவனார்!
வாழ்க்கைத் துணைவி
மனைக்குரிய மாண்புகொண்டு
வாழ்வில் அவனின்
வருவாய் அறிந்து
செலவு செயல்வேண்டும்
என்பது மன்றியும்,
"தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண்" என்று சொல்கின்றார்.
தன்னையும் தக்கபடி
காத்துக் கொளல்வேண்டும்
தன்கொழுநன் தன்னையும்
காத்திடல் வேண்டும்
சீர்சால் திராவிடர்
பண்பு சிதையாமல்
நிற்பவளே பெண்ணாவாள்.
"மங்கலம் என்ப
மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட்
பேறு" பெறுக.
"வழங்குவ துள்வீழ்ந்தக்
கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல்
இல்"மற வாதீர்.
"இளிவரின் வாழாத
மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும்
உலகு" தெளிக.
மணமகளாரே, மணமகனாரே
இணைந்தின் புற்றுநன்
மக்களை ஈன்று
பெரும்புகழ் பெற்றுநீடூழி
இருநிலத்து வாழ்கஇனிது.

நன்றி கூறல்

அறுசீர் விருத்தம்
மணமக்கட் குரியார் ஆங்கு
வாழ்த்தொலிக் கிடை எழுந்தே,
"மணவிழாச் சிறக்க ஈண்டு
வந்தார்க்கு நன்றி! இந்த
மணஅவைத் தலைமை தாங்கி
மணமுடித் தருள் புரிந்த
உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்
உளமார்ந்த நன்றி" என்றே
கைகூப்பி, அங்கெ வர்க்கும்
அடைகாயும் கடிது நல்கி
வைகலின் இனிதின் உண்ண
வருகென அழைப்பா ரானார்!
பெய்கெனப் பெய்த இன்பப்
பெருமழை இசையே யாக
உய்கவே மணமக்கள் தாம்
எனஎழும் உள்ளார் வாழ்த்தே.

தக்ஷ காண்டம்

அ டி மு டி தே டு ப ட ல ம்

இங்கிது நிற்கமுன் இறைவன் வந்துழி
அங்குற நின்றதோர் அமரர் தங்களுட்
செங்கம லத்துறை தேவன் தக்கனாந்
துங்கமில் மைந்தனை நோக்கிச் சொல்லுவான். 1

யாதுமுன் னுணர்ந்தனை யாது செய்தனை
யாதவண் கருதினை யாரிற் பெற்றனை
யாதுபின் செய்தனை யாது பட்டனை
யாதிவண் பெற்றனை யாதுன் எண்ணமே. 2

பொன்றுதல் இல்லதோர் புலவர் யாவர்க்கும்
வன்றிறல் முனிவரர் தமக்கும் வையமேல்
துன்றிய அந்தணர் தொகைக்குந் துண்ணெனக்
கொன்றுயிர் உண்பதோர் கூற்ற மாயினாய். 3

சீரையுந் தொலைத்தனை சிறந்த தக்கனாம்
பேரையுந் தொலைத்தனை பேதை யாகிநின்
ஏரையுந் தொலைத்தனை ஏவல் போற்றுநர்
ஆரையுந் தொலைத்தனை அலக்கண் எய்தினாய். 4

நின்னுணர் வல்லது நிகரின் மேலவர்
சொன்னதும் உணர்ந்திலை தொல்லை ஊழினால்
இந்நிலை யாயினை இறையை எள்ளினாய்
முன்னவன் உயர்நிலை முழுதுந் தேர்ந்தநீ. 5

இயற்படு வளம்பெறீஇ ஈசன் மேன்மைகள்
அயர்த்தனை நின்னள வன்று மையறான்
அயிர்த்தொகை தமக்கெலாம் உள்ள தாதலான்
மயக்கினை அடைந்தனை மற்றென் செய்திநீ. 6

முற்றுணர் வெய்தியே முழுத ளித்திடப்
பெற்றவெங் கண்ணினும் பெரிது மாமயக்
குற்றன முற்பகல் உதுகண் டின்றுபோல்
நெற்றியங் கண்ணினான் அருளின் நீக்கினான். 7

ஆதலின்அருளுடை அமல நாயகன்
பாதம தருச்சனை பரிவிற் செய்குதி
பேதுறும் இப்பவப் பெற்றி நீக்கியே
போதமொ டின்னருள் புரிவன் என்றலும். 8

மைதிகழ் முகத்தினன் மற்ற தற்கிசைந்
துய்திற முணர்த்தினை உங்கள் கண்ணுமுன்
எய்திய மையலும் எம்பி ரானருள்
செய்ததும் இயம்புதி தௌ¤தற் கென்னவே. 9

பொன்னிருஞ் சததளப் போதின் மீமிசை
மன்னிய திசைமுகன் மதலை மாமுகம்
முன்னுற நோக்கியே முந்துங் கூறினம்
இன்னமும் அக்கதை இயம்பு வோமெனா. 10

(1. துங்கம் இல் - உயர்வு இழந்த.
3. பொன்றுதல் இல்லதோர் புலவர் - தேவர்கள்.
கூற்றம் - எமன். 4. சீர் - சகல சிறப்பு. ஏர் - அழகு.
6. மையல் - மயக்கம். 8. அமல நாயகன் - சிவபெருமான்.
பரிவு - அன்பு. பவம் - பாவம். போதம் - ஞானம்.
9. மைதிகழ் மகத்தினன் - தக்கன்; (மை - ஆடு).
10. சததளப்போது - நூறிதழ்த் தாமரைப்பூ.)

நாலுள திசைமுக நாதன் தொல்லைநாள்
மாலொடு பற்பகல் மலைவு செய்துநாம்
மேலதோர் பொருளென விமலன் வந்தருள்
கோலம துன்னியே தொழுது கூறுவான். 11

வேறு

பத்தினொடு நூறெதிர் படுத்தயுக நான்மை
ஒத்தமுடி வெல்லையென தோர்பகல தாகும்
அத்தகு பகற்பொழுதும் அந்தியொடு செல்ல
நத்தமுறு நான்துயிலின் நண்ணுவன் அவ்வேலை. 12

வாளுமொடுங் கும்பரிதி மாமதி யொடுங்கும்
நாளுமொடுங் குந்தமது நாளுமொடுங் குற்றே
கோளுமொடுங் குங்குலிச பாணிமுதல் வானோர்
கேளுமொடுங் கும்புவனி கேடுபடும் அன்றே. 13

மண்ணுலகில் ஆருயிர் வறந்திறுதி யாகும்
விண்ணுறு பதங்களில் வியன்முனிவர் யாருந்
துண்ணென வெருக்கொடு துளங்கினர்கள் சூழா
எண்ணுசன லோகமிசை எய்துவர்கள் அந்நாள். 14

வாரிதிகள் நாற்றிறமும் எல்லையில் எழுந்தே
ஆரியை தவஞ்செய்பதி ஆதியன அல்லாப்
பாரினைய ருந்தியொரு பாகமதன் மேலும்
ஓரெழு பிலத்துலகம் உண்டுலவும் அன்றே. 15

ஒண்டிகிரி மால்வரை உடுத்தநில முற்றுங்
குண்டுறு பிலத்தினொடு கூடும்வகை வீட்டி
அண்டருல குண்டுநிமிர்ந் தப்புறனு மாகி
மண்டுபுன லேயுலகை மாற்றியிடும் அன்றே. 16

ஆனதொரு வேலையிலொ ராலிலையின் மீதே
மேனிலவு தண்மதி மிலைந்தவன் மலர்த்தாள்
தானகமு றுத்தியொர் தனிக்குழவி யேபோல்
கானுறு துழாய்மவுலி கண்டுயிலு மாதோ. 17

கண்டுயிலு கின்றபடி கண்டுசன லோகத்
தண்டுமுனி வோர்புகழ வாங்ஙனம் விழித்தே
பண்டைநிலன் நேடவது பாதலம தாகக்
கொண்டல்மணி மேனியனொர் கோலவுரு வானான். 18

(11. மலைவு - போர்.
12. பத்தினொடு நூறு எதிர்படுத்த யுக நான்மை - ஆயிரஞ் சதுர் யுகங்கள்.
நத்தம் - இரவு. 13. வாள் - ஔ¤; இங்கு அக்கினி. நாள் - வாணான்.
கோள் - கிரகம். 14. சனலோகம் - இது ஒரு உலகம்.
15. ஆரியை தவஞ்செய் பதி - உமாதேவி தவஞ்செய்த காஞ்சிபுரம்.
உண்ணுதல் - மூடிக்கொள்ளுதல்.
16. ஒண்திகிரி மால்வரை - சக்கரவாளகிரி. குண்டு - ஆழம்.
18. நேட - தேட. கோலவுரு - பன்றி வடிவு.)

கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான். 19

அற்பொழுது நாலுகமொ ராயிரமும் ஏக
எற்பொழுது தோன்றிய தியான்துயில் உணர்ந்தே
கற்பனை இயற்றிய கருத்தினினை போழ்தின்
நிற்புழி அடைந்தன நெடும்புணரி எல்லாம். 20

அருத்திகெழு பாற்கடல் அராவணையின் மீதே
திருத்திகழும் மார்புடைய செம்மல்புவி தன்னை
இருத்தினம் எயிற்றினில் எடுத்தென நினைத்தே
கருத்தினில் அகந்தைகொடு கண்டுயிலல் உற்றான். 21

ஆனபொழு தத்தினில் அளப்பிலிமை யோரைத்
தானவரை மானுடவர் தம்மொடு விலங்கை
ஏனைய வுயிர்த்தொகையை யாவையும் அளித்தே
வானகமும் வையகமும் மல்கும்வகை வைத்தே. 22

மன்னியலும் இந்திரனை வானரசில் உய்த்தே
அன்னவன் ஒழிந்ததிசை யாளர்களை எல்லாம்
தந்நிலை நிறுத்தியது தன்னைநெடி துன்னி
என்னையல தோர்கடவுள் இன்றென எழுந்தேன். 23

துஞ்சலுறு காலைதனில் துஞ்சுமெழும் வேலை
எஞ்சலி லுயிர்த்தொகுதி யாவுமெழும் யானே
தஞ்சமெனை யன்றியொரு தாதையிலை யார்க்கும்
விஞ்சுபொருள் யானென வியந்தெனை நடந்தே. 24

மல்லலுறு மேலுலகு மாதிரமும் ஏனைத்
தொல்லுலகு மேருவொடு சுற்றுகடல் ஏழும்
ஒல்லென விரைத்தெழும் உயிர்த்தொகையும் அல்லா
எல்லையில் பொருட்டிறனும் யான்நெடிது நோக்கி. 25

இப்பொருள் அனைத்துமுனம் யான்பயந்த என்றால்
ஒப்பிலை யெனக்கென உளத்திடை மதித்தேன்
அப்பொழுதில் ஆரமுத ஆழியிடை யாழிக்
கைப்புயல் அகந்தையொடு கண்டுயிலல் கண்டேன். 26

(19. எவண் - எவ்விடம். வாலிய - வெண்மையான.
எயிறு - கொம்பு. மூலமெனவே - முன்போலவே.
20. அல்பொழுது - இராப்பொழுது. எல்பொழுது - பகற்பொழுது.
21. அருத்தி - விருப்பம். கருத்தினில் - உள்ளத்தினில்.
24. துஞ்சல் - தூங்குதல். விஞ்சுபொருள் - உயர்ந்த பொருள்.
25. மாதிரம் - திக்கு.
26. அமுத ஆழி - பாற்கடல். புயல் - திருமால்;
ஆகுபெயர். துயிலல் - நித்திரை செய்தலை.)

அன்றவனை மாலென அறிந்தனன் அறிந்துஞ்
சென்றனன் அகந்தையொடு செய்யதிரு வைகும்
மன்றன்மணி மார்பமிசை வண்கைகொடு தாக்கி
இன்றுயில் உணர்ந்திடுதி என்றலும் எழுந்தான். 27

ஏற்றெழு முராரிதனை யாரையுரை என்றே
சாற்றுதலும் யாமுனது தாதையறி யாய்கொல்
நாற்றலைகொள் மைந்தவென நன்றென நகைத்துத்
தேற்றிடினும் நீதுயில் தௌ¤ந்திலைகொ லென்றேன். 28

தந்தையென வந்தவர்கள் தாமுதவு கின்ற
மைந்தர்கள் தமக்குரைசெய் வாசகம தென்ன
முந்துற வெமக்கிது மொழிந்ததியல் பன்றால்
எந்தையென வேநினைதி யாம்பிரம மேகாண். 29

உந்தியிலி ருந்துவரும் உண்மையுண ராமே
மைந்தனென நீயெமை மனத்தினினை குற்றாய்
இந்தன முதித்திடும் எரிக்கடவு ளுக்குத்
தந்தையது வோவிது சழக்குரைய தன்றோ. 30

நின்னுடைய தாதையென நீயுனை வியந்தாய்
அன்னதை விடுக்குதி அருந்தவ வலத்தான்
முன்னமொரு தூணிடை முளைத்தனை யவற்றால்
உன்னிலது வேமிக உயர்ந்தபொரு ளாமோ. 31

துய்யமக னாம்பிரு சொற்றசப தத்தால்
ஐயிரு பிறப்பினை அடிக்கடி யெடுத்தாய்
மெய்யவை யனைத்தையும் விதித்தனம் விதித்தெங்
கையது சிவந்துளது கண்டிடுதி என்றேன். 32

வேறு

அன்றவற் கெதிர்புகுந் தனையசொற் புகறலுங்
குன்றெடுத் திடுகரக் கொண்டல்போல் மேனியான்
நன்றெனச் சிரமசைஇ நகைசெயா வெகுளியால்
பொன்றளிர்க் கரதலம் புடைபுடைத் துரைசெய்வான். 33

நச்சராப் பூண்டிடு நம்பனுன் சென்னியில்
உச்சியந் தலையினை உகிரினாற் களைதலும்
அச்சமாய் வீழ்ந்தனை யதுபடைத் தின்னமும்
வைச்சிலாய் நன்றுநீ மற்றெமை தருவதே. 34

நேயமாய் முன்னரே நின்னையீன் றுதவிய
தாயும்யா மன்றியுந் தந்தையும யாமுனக்
காயதோர் கடவுள்யாம் அடிகள்யாம் மைந்தநம்
மாயையால் இன்றிவண் மதிமயக் குறுதிகாண். 35

(29. பிரமம் - மேலான கடவுள்.
30. இந்தனம் - விறகு. சழக்கு - அறியாமை.
31. முன்னமொரு தூணிடை முளைத்தனை -
இது நரசிங்க அவதாரத்தைக் குறிப்பது.
32. பிருகு - ஒரு முனவர். ஐயிருபிறப்பு - பத்துப்பிறப்பு.
33. குன்று - கோவர்த்தனகிரி. அசைஇ - அசைத்து.
34. உகிர் - நகம். களைதல் - நீக்குதல். அது - அத்தலையை.
வைச்சிலாய் - வைத்துக்கொண்டாய் இல்லை.
35. அடிகள் - குரு. மைந்த - மகனே!)

பொன்னலா தாங்கொலோ பூணெலாம் இறைபுரி
மன்னலா தாங்கொலோ மாநில மாநிலந்
தன்னலா தாங்கொலோ தகுவதோர் வளமதில்
என்னலா தாங்கொலோ எச்சரா சரமுமே. 36

எண்ணுவிப் போனுநான் எண்ணுகின் றோனுநான்
கண்ணுதற் பொருளுநான் காண்டகும் புலனுநான்
நண்ணுதற் கரியன்நான் நாரணக் கடவுள்நான்
விண்ணகத் தலைவன்நான் வேதமும் பொருளுநான். 37

ஆதிநான் உருவுநான் அருவுநான் இருளுநான்
சோதிநான் அத்தன்நான் தூயன்நான் மாயன்நான்
யாதுநான் பூதநான் யாருநான் சங்கரன்
பாதநான் அவனுநான் பரமெனும் பொருளுநான். 38

என்றுபற் பலவுரைத் திடுதலும் யானெதிர்
சென்றுருத் திருவருஞ செருவினைப் புரிதுமேல்
வென்றியுற் றவரரோ மேலையோர் எழுகென
வன்றிறற் போர்செய்வான் வந்தனன் மாலுமே. 39

ஏற்றெழுந் தோர்சிலை ஏந்தியே வாங்கிமால்
கூற்றிரும் படைமுதற் கொடியவெம் படையெலாம்
மாற்றருந் தன்மையால் வல்லையுய்த் திடுதல்கண்
டாற்றினன் குசைகளால் அனையவெம் படைதொடா. 40

வேறு

ஆங்கவை யழிவுற அரியுந் தன்படை
வாங்கினன் விடுத்தலும் வருதல் கண்டியான்
பாங்கரின் நின்றவென் படையை அங்கையில்
தாங்கிநின் றுய்த்தனன் தடுத்து மீண்டதே. 41

அப்படை மீண்டபின் ஆதி யாகிய
ஒப்பருஞ் சிவனளித் துளது புங்கவர்
எப்பெரும் படைக்குமோ ரிறைவ னாயது
மைப்புயல் மேனிமால் வழுத்தி வாங்கினான். 42

மஞ்சன முதலிய மறுவில் பூசனை
நெஞ்சுறு புலன்களின் நிரப்பி ஓச்சலும்
எஞ்சலில் அமரர்கள் இரிய மேற்செலும்
நஞ்சினுங் கொடிதென நடந்த வேலையே. 43

(39. செருவினை - போரினை. புரிதுமேல் - செய்தால்.
40. கூற்று இரும்படை எமனுடைய பெரிய அஸ்திரம்.
குசைகளால் - தருப்பைகளால்.
42. புங்கவர் எப்பெரும் படைக்கும் ஓர் இறைவனாயது -
இது பாசுபதாஸ்திரம்.
43. மஞ்சனம் - திருமஞ்சனம். நிரப்பி - செய்துமுடித்து.)

முன்னமே எனக்கும்அம் முக்கண் நாயகன்
அன்னதோர் படையளித் தருளி னானதை
உன்னியே வழிபடீஇ ஒல்லை யுய்த்தனன்
வன்னிமேல் வன்னிசெல் வண்ண மென்னவே. 44

ஒருதிறத் திருவரும் உஞற்றி யேவிய
அரனருள் பெரும்படை தம்மில் ஆடல்செய்
தெரிகனற் கற்றைகள் யாண்டுஞ் சிந்தியே
திரிதலுற் றுலகெலாஞ் செற்று லாயவே. 45

அப்படை திரிதலும் அவைகள் வீசிய
துப்புறழ் கொழுங்கனல் தொல்லை வானினும்
இப்புவி மருங்கினும் ஈண்ட வானவர்
வெப்புற விரிந்தனர் விதிர்ப்புற் றேங்குவார். 46

வீண்டனர் ஒருசிலர் வெதும்பி விம்மியே
மாண்டனர் ஒருசிலர் வந்த நஞ்சமுண்
டாண்டவர் கழலிணை அடைதும் யாமெனாக்
காண்டகு கயிலையின் கண்ணுற் றார்சிலர். 47

காரெலாங் கரிந்தன ககனந் தன்னொடு
பாரெலாம் எரிந்தன பௌவப் பாற்படு
நீரெலாம் வறந்தன நிரந்த பல்லுயிர்ப்
பேரெலாந் தொலைந்தன பின்னும் போர்செய்தேம். 48

இந்தவா றமர்புரிந் திட்ட காலையில்
தந்தையார் அருளினால் தமியன் மாமுகம்
வந்துநா ரதனெனும் மறுவில் மாமுனி
சிந்தைசெய் தெமக்கிவை செப்பல் மேயினான். 49

நீர்முதல் நாமென நினைந்து கூறியே
போர்முத லேசில புரிகின் றீர்கொலாம்
ஓர்முதல் அன்றியே இல்லை உங்களில்
ஆர்முதல் இருவரும் அன்ன பண்பினீர். 50

பொருசமர் கருதியே புகுந்த போழ்தினும்
உரியதோர் படையல துலகந் தீப்பதோர்
வெருவரும் பெரும்படை விடுத்திர் அப்படை
அருளிய கடவுளை அயர்த்திர் போலுமால். 51

கடவுளை மறந்திரேல் கருதி நீர்பெறும்
அடுபடை நாமமும் அயர்த்தி ரோவது
நெடிதுநும் மனத்தினில் நினைந்து தேற்றுமின்
விடுமினி அமரென விளம்பி மேலுமே. 52

(46. துப்பு உறழ் - பவளத்துண்டுகள் போல.
47. வீண்டனர் - விலகியோடினார்கள்.
49. தந்தையார் - இங்குச் சிவபெருமான்.
50. ஓர் முதல் அன்றியே இல்லை - ஒரு பிரமத்தினை அன்றி வேறு இல்லை.
52. அயர்த்திரோ - மறந்தீர்களோ.)

வாதியா இன்னுநீர் மலைதி ரேயெனின்
ஆதியாய் அருவுரு வான தோர்பொருள்
சோதியாய் நடுவுறத் தோன்றுங் காண்டிரென்
றோதியால் எமக்கிவை உணர்த்திப் போயினான். 53

போயினன் உரைத்தசொற் புந்தி கொண்டிலம்
தீயென உருத்திகல் செருக்கு நீங்கலம்
ஆயிர மாண்டுகா றமரி யற்றினம்
மாயிரும் புவனமும் உயிரும் மாயவே. 54

இங்கிவை யாவையும் இறுதி யூழியின்
அங்கியின் நடம்புரி அண்ணல் நோக்கியே
தங்களில் இருவருஞ் சமர்செய் சின்றனர்
புங்கவர் தாமெனும் புகழை வெ·கினார். 55

அறிவறை போயினர் அகந்தை உற்றனர்
உறுவதொன் றுணர்கிலர் உண்மை யோர்கிலர்
சிறுவரில் இருவருஞ் சீற்றப் போர்செயா
இறுதிசெய் கின்றனர் உலகம் யாவையும். 56

ஈங்கிவர் செயலினை இன்னுங் காண்டுமேல்
தீங்குறும் உலகுயிர் சிதைந்து வீடுமால்
ஓங்கிய நந்நிலை உணர்த்தின் ஆயிடைத்
தாங்கரும் வெஞ்சமர் தணிந்து நிற்பரால். 57

தம்மையே பொருளெனச் சாற்று கின்றதும்
வெம்மைசேர் வெகுளியும் வெறுத்து வீட்டியே
செம்மைசேர் மனத்தராய்த் திகழ்வர் தாமெனா
எம்மையா ளுடையவன் எண்ணி னானரோ. 58

வேறு

ஆன்றதோ ரளவை தன்னில் அடைந்தது மாகந் தன்னில்
வான்றிகழ் பானாட் கங்குல் மதிபகல் தழுவு நென்னல்
ஞான்றது தனில்யாங் கண்டு நடுக்குற நடுவ ணாகத்
தோன்றினன் கனற்குன் றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி. 59

தோற்றிய செய்ய சோதி தொல்லமர் உழந்தி யாங்கண்
மாற்றரும் படைக ளாக வழங்கிய இரண்டும் வௌவி
ஆற்றருந் தன்மைத் தாக அணுகுறா தகன்று போகிச்
சீற்றமுஞ் சமரும் நீங்கிச் சேணுற நோக்கி நின்றேம். 60

(53. மலைதிரேல் - போர் புரிவீராயின். ஓதியால் - ஞான உணர்ச்சியால்.
54. புந்தி - மனம். மா இரும் - மிகப்பெரிய.
56. அறிவு அறை போயினர் - அறிவு அற்றுப் போயினர்.
58. எம்மையாளுடையவன் - சிவபெருமான்.
59. மாகந்தன்னில் - மாசி மாதத்தில். பானாட்கங்குல் மதிபகல்
தழுவு நென்னல் ஞான்றதுதனில் - அமாவாசையின் முதனாளான
சதுர்த்தசியின் நடு இராத்திரியில்; மகாசிவராத்திரியில்.
60. சோதி - சோதி லிங்கம். சேணுற - வானத்தில் (அச்சோதிலிங்கத்தையே).)

நிற்றலும் யாங்கள் கேட்ப நெடுவிசும் பிடையோர் வார்த்தை
தெற்றென எழுந்த தம்மா சிறுவிர்காள் நுமது வன்மை
பற்றலர் புரமூன் றட்ட பரமமே காண்பான் சோதி
மற்றிதன் அடியும் ஈறும் வரன்முறை தேரு மென்றே. 61

கேட்டனம் அதனை நெஞ்சில் கிளர்ந்தெழு சீற்றம் யாவும்
வீட்டினம் எனினும் பின்னும் விட்டிலம் அகந்தை தன்னைக்
காட்டிய எமது முன்னோன் காண்பனும் வலியை யென்ன
வீட்டுடன் விசும்பிற் சொற்றார் யார்கொலென் றெண்ணிப் பின்னும். 62

ஏணுற எதிர்ந்தி யாஞ்செய் இகலினுக் கிடையூ றாக
நீணில மதனைக் கீண்டு நிமிர்ந்துவான் புகுந்து நீடு
மாணுறு சோதி தானும் மறைமுனி உரைத்த வாறு
காணிய வந்த தெம்மில் கடந்தவான் பொருள்கொல் என்றேம். 63

தீதறு காலின் வந்த செந்தழல் அன்றால் ஈது
யாதுமொன் றறிதல் தேற்றாம் இருவரும் இதனை இன்னே
ஆதியும் முடியும் நாடி யன்னது காண்டும் என்னா
மாதவன் தானும் யானும் வஞ்சினம் இசைத்து மன்னோ. 64

நீடுவான் உருவிச் சென்று நிலனுற விடந்து புக்கும்
ஓடிநாம் ஒல்லை தன்னில் உற்றிதற் கடியும் ஈறும்
நாடினால் அவற்றில் ஒன்றும் நலம்பெற முன்னங் கண்டோர்
பீடுயர் தலைவர் ஈதே துணிவெனப் பேசி நின்றேம். 65

முடியினைக் காண்பன் என்றே மொழிந்தனன் தமியன் ஏனை
அடியினைக் காண்பன் என்றே அரியும்அங் கிசையா நின்றான்
நடைபயில் மழலை ஓவா நாகிளஞ் சிறுவர் வானில்
சுடர்மலி கதிரைக் கையால் தீண்டுவான் துணியு மாபோல். 66

எரியுறழ் தறுகட் செங்கண் இமிலுடை எருத்தம் யாரும்
உருகெழு துழனிக் கூர்வாய் ஔ¢ளெயி றிலங்கு தந்தங்
கருவரை யனைய மேனிக் கடுநடைக் குறுந்தாள் வௌ¢ளைக்
குரமொடு கண்ணன் அன்றோர் கோலமாங் கோலங் கொண்டான். 67

ஒருபது நூற தாகும் யோசனை உகப்பி னோடு
பருமையு மாகும் அந்தப் பகட்டுரு வாகி முன்னந்
தரணியை இடந்து கீழ்போய்த் தடவியே துருவிச் சென்று
நிறைபடு புவனம் யாவும் நீந்தியே போயி னானால். 68

(61. கேட்ப - கேட்கும்படி. சிறுவிர்காள் - சிறுவர்களே.
காண்பான் - காணுமாறு. தேரும் - உணருங்கள்.
63. ஏண் - வலிமை. 64. காலின் வந்த - வாயுவில் உண்டாகும்.
ஈது - இச்சோதி. யானும் - இங்குப் பிரமன். வஞ்சினம் - சபதம்.
67. தறுகண் - அஞ்சாமை. கருவரை - கரியமலை.
குறுந்தாள் - குறுகிய காலும். குரம் - குளம்பு. கண்ணன் - திருமால்.
கோலமாம் - பன்றியின். கோலம் - வடிவு. 68. உகப்பு - உயரம்.
பருமை - பருமன். பகடு - பன்றி. இடந்து - பிளந்து. நீந்தி - கடந்து.)

பாதலம் நாடி அன்னான் படர்தலும் யானும் ஆங்கோர்
ஓதிம வடிவ மாகி ஒல்லையில் எழுந்து மீப்போய்
மேதகு விசும்பின் மேலாம் வியன்புவ னங்கள் நாடிப்
போதலுஞ் சோதி முன்னம் போலமேல் போயிற் றம்மா. 69

முன்னமோ ரேன மாகி முரணொடு புவனி கீண்டு
வன்னியாய் எழுந்த சோதி வந்ததோர் மூலங் காண்பான்
உன்னியே போன மாலோன் ஊக்கியே செல்லச் செல்லப்
பன்னெடுங் காலஞ் சென்ற பாதமுங் காணான் மாதோ. 70

நொந்தன எயிறு மேனி நுடங்கின நோன்மை யாவுஞ்
சிந்தின புனலுண் வேட்கை சேர்ந்தன உயிர்ப்பி னோடும்
வந்தன துயரம் போன வஞ்சினம் அகந்தை வீந்த
முந்தையில் உணர்வு மால்பால் முழுதொருங் குற்ற தன்றே. 71

தொல்லையில் உணர்ச்சி தோன்றத் துண்ணெனத் தௌ¤ந்த கண்ணன்
அல்லுறழ் புயலின் தோற்றத் தண்ணலங் களிற்றின் யாக்கை
மெல்லவே தரிக்க லாற்றான் வீட்டவுங் கில்லான் மீண்டு
செல்லவும் ஊற்ற மில்லான் சிவனடி சிந்தை செய்தான். 72

வேறு

என்றும் உணர்வரிய எம்பெருமான் உன்றிருத்தாள்
அன்றி அரணில்லை அவற்றைஅருச் சித்திடவும்
பொன்றிய தென்வன்மை பொறுத்தி குறையடியேன்
ஒன்று முணரேன்என் றுளம்நொந்து போற்றினனே. 73

ஆன பொழுதில் அமலன் திருவருளால்
தேனு லவுதண்டார்த் திருமால் மிடலுடைத்தாய்
ஏன வடிவோ டெழுந்துபுவிப் பால்எய்தி
வானுறுசோ திக்கணித்தா வந்து வணங்கிநின்றான். 74

வேறு

நின்றான் ஒருபால் நெடுமாலது நிற்க யான்முன்
பின்றா வகையாற் பெருஞ்சூளிவை பேசி வானில்
சென்றா யிரமாண்டு திரிந்து திரிந்து நாடிக்
குன்றாத சோதிக் கொழுந்தின்தலை கூட லேன்யான். 75

மீளும் படியும் நினையேன் வினையேனும் மீளில்
சூளும் பழுதா மதுவன்றித் துணிந்து முன்னம்
மூளுஞ் சுடரின் முதல்கண்டரி மூர்த்தி யாவான்
ஆளென்பர் என்னை அழிவெய்தும்இவ் வாற்றல் மன்னோ. 76

எந்நாள் வரைசெல் லினுஞ்செல்லுக இன்னும் விண்போய்ப்
பொன்னார் முடிகண் டபின்அல்லது போக லேனென்
றுன்னா வதுகா ணியபோதலும் உள்ளம் வெம்பி
மன்னா வுயிரு முலைந்தாற்றலும் மாண்ட தன்றே. 77

(69. ஓதிமம் - அன்னப்பறவை. 70. ஏனம் - பன்றி. புவனி - பூமியை.
ஊக்கி - முயற்சித்து. 72. அல்உறழ் - இருளை ஒத்த.
களிற்றின்யாக்கை - பன்றிவுருவினை. ஊற்றம் - வல்லமை.
73. என்றும் - எந்நாளும். 74. மிடல் - வலிமை. புவிப்பால் - பூவுலகத்தை.
75. பெருஞ்சூள் - பெரிய சபதம். 77. எந்நாள் வரை செல்லினும் செல்லுக -
எவ்வளவு காலம் சென்றாலும் செல்லட்டும்; எந்நாள் - எவ்வளவு காலம்;
வரை - இச்சோதிமலை செல்லினும் - மேற்போனாலும்;
செல்லுக - இன்னும் மேற்போகட்டும்.)

கண்ணுஞ் சுழன்ற சிறைநொந்தன காலும் ஓய்ந்த
எண்ணுந் திரிந்தத துபோதில் எழுந்த சோதி
உண்ணின்ற சித்த ரெனவேபலர் ஒல்லை மேவி
விண்ணின் தலைபோய் இதுவொன்று விளம்ப லுற்றார். 78

வானார் பரஞ்சோ தியின்ஈற்றினை வாரி தன்னுள்
மீனார் தரவே திரிகின்றதொர் வௌ¢ளை அன்னந்
தானா முணருஞ் சிறைபோகித் தளர்ந்து வன்மை
போனலும் நாட வருகின்றது போலும் அம்மா. 79

அன்னந் தனக்கீ தறிவின்மைய தாகும் அல்லால்
பின்னொன் றுளதோ துணிவுற்றதொர் பெற்றி நோக்கின்
இன்னுஞ் சிறிது பொழுதேகின் இறக்கும் இந்த
மன்னுஞ் சுடரைச் சிவனென்று மனங்கொ ளாதோ. 80

மாலென் பவனும் நிலங்கீண்டனன் வல்லை யேகி
மூலந் தெரிவான் உணராமல் முரணும் நீங்கிச்
சீலங் குறுகச் சிவனேசர ணென்று பைய
ஞாலந் தனில்வந் தனல்வெற்பினை நண்ணி நின்றான். 81

முந்துற் றிதனை அருள்செய்திடு மூர்த்தி தானே
சிந்தைக்குள் மாசு தனைத்தீர்த்தருள் செய்யின் உய்யும்
இந்தப் பறவை யெனயானும் இதனை நாடிப்
புந்திக்குள் மைய லொழிந்தேயவர்ப் போற்றி செய்தேன். 82

ஈசன் அருளால் இவைகூறினர் ஏக லோடும்
ஆசின் வழியாம் அகந்தைத்திற னாதி யாய
பாசங் களைவீட் டியரன்புகழ பன்னி ஏத்தி
நேசங் கொடுபூ சனைசெய்ய நினைந்து மீண்டேன் 83

வேறு

வந்துகண்ணன் தனையணுகி வான்பொருள்யா மென்றிகலி
முந்துறுவெஞ் சமர்இயற்றி முனிமொழியும் உணர்ந்திலமால்
தந்தைவர வறியாமல் தாள்முடியுந் தேடலுற்றேம்
அந்தமுறும் வேலைதனில் அவன்அருளால் அவற்புகழந்தேம். 84

கீண்டுநில னிருவிசும்பிற் கிளர்ந்தும்அடி முடியுணரேம்
மீண்டும்அவன் தன்அருளால் மிடல்பெற்று வந்தனமால்
ஈண்டுசிவன் தனைவழிபட் டிருவரும்அன் னவன்தோற்றங்
காண்டுமென யானுரைப்பக் கண்ணனும்அங் கதற்சிசைந்தான். 85

(79. ஈற்றினை - முடிவினை. வாரி - நீர். ஆர்தா - அடைய.
80. மூலம் - அடி. பைய - மெதுவாக.
83. ஆசின் வழியாம் - அஞ்ஞானத்தின் வழியாய் உண்டாகும்.)

இருவரும்அச் சிவனுருவை இயல்முறையால் தாபித்து
விரைமலர்மஞ் சனஞ்சாந்தம் விளக்கழலா தியவமைத்துப்
பொருவருபூ சனைபுரிந்து போற்றிசெய்து வணங்குதலும்
எரிகெழுசோ திக்கணித்தா எந்தைஅவண் வந்தனனே. 86

மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும்
மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ்
செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய்
முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான். 87

அவ்விடையா மிருவர்களும் அமலன்றன் அடிவணங்கிச்
செவ்விதின்நின் றவன்அருளில் திளைத்திதனைச் செப்பினமால்
மெய்வகையாம் அன்பின்றி விளங்காநின் னியம்மறையும்
இவ்வகையென் றுணராதே யாங்காணற் கௌ¤வருமோ. 88

வேறு

புந்தி மயங்கிப் பொருங்காலை யெம்முன்னில்
செந்தழலின் மேனிகொடு சென்றருளித் தொல்லறிவு
தந்து நினையுணர்த்தித் தாக்கமரும் நீக்கினையால்
எந்திரம்யாம் உள்நின் றியற்றுகின்றாய் நீயன்றோ. 89

உன்னை உணரும் உணர்வுபுரிந் தாலுன்னைப்
பின்னை யுணர்வேம் பெருமசிறி யேஞ்செய்த
புன்னெறியை யெல்லாம் பொறுத்தியால் தஞ்சிறுவர்
என்ன செயினும் இனிதன்றோ ஈன்றவர்க்கே. 90

இன்னாத் தகைசேர் இரும்பினைவல் லோன்இலங்கும்
பொன்னாக் கியபரிசு போல எமையருளி
மன்னாக் கினையயர்த்தோம் மற்றுனையும் யாங்களுயிர்
தொன்னாட் பிணித்த தொடர கற்றவல் லோமோ. 91

வேறு

என்றி யம்பியாம் ஏத்தலும் எதிருற நோக்கிக்
குன்ற வில்லுடை யொருவன்நீர் செய்தன குறியா
ஒன்றும் எண்ணலீர் நும்பெரும் பூசனை உவந்தாம்
அன்று மக்கருள் பதந்தனை இன்னும்யாம் அளித்தேம். 92

வேண்டு நல்வரங் கேண்மின்நீர் என்றலும் விசும்பில்
தாண்ட வம்புரி பகவநின் சரணமே அரணாப்
பூண்டி டுந்தலை யன்பருள் என்றலும் புரிந்து
காண்ட குந்தழற் சோதியுள் இமைப்பினிற் கலந்தான். 93

(86. இயல் முறை - இலக்கண முறைப்படி. விளக்கு - தீபம்.
அழல் - தூபம். எந்தை - எம்பெருமான்.
87. பணிக் கொடும் பூண் - அரவகுண்டலம்.
சேயிழை - உமாதேவியர். யாம் - நாங்கள்.
89. நினை உணர்த்தி - உன்னையும் அறிவித்து.
90. பெரும - பெருமானே! ஈன்றவர்க்கு - பெற்றவர்க்கு.
91. இன்னாத் தகைசேர் - கொடுந்தன்மை வாய்ந்த.
மன்ஆக்கினை - படைத்தல் காத்தல் தொழில்களில் தலைமை ஆக்கினை.
தொடர் - பாசம். 93. விசும்பில் - சிதாகாயவௌ¤யில்.
தாண்டவம் - ஆனந்தத் தாண்டவம். பகவ - பகவனே!
கலத்தல் - சோதியோடு சோதியாதல்.)

கலந்த காலையில் யாங்கள்முன் தொழுதெழுங் காலைச்
சலங்கொள் பான்மையின் முன்னுறத் தேடுவான் தழலாய்
மலர்ந்த பேரொளி மீமிசை சுருங்கியே வந்தோர்
விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப. 94

அன்ன தாஞ்சிவ லிங்கரூப ந்தனை அணுகி
முன்ன மாகியே மும்முறை வலஞ்செய்து முறையால்
சென்னி யால்தொழு தேத்தியெம் பதங்களிற் சென்றேம்
பின்னர் எந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும். 95

அரியும் யானும்முன் தேடும்அவ் வனற்கிரி யனல
கிரியெ னும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
இரவ தேசிவ ராத்திரி யாயின திறைவற்
பரவி யுய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும். 96

ஆத லால்அவ னருள்பெறின் அவனியல் அறியும்
ஓதி யாகுவர் அல்லரேல் பலகலை உணர்ந்தென்
வேத நாடியென் இறையும்அன் னவன்நிலை விளங்கார்
பேதை நீரரும் ஆங்கவர் அல்லது பிறரார். 97

மோக வல்வினை யாற்றியே பவத்திடை மூழ்கும்
பாகர் அல்லவர்க் கெய்திடா தவனருள் பவமும்
போக மாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர்க்
காகும் மற்றவன் அருள்நிலை பாகராம் அவரே. 98

நீயுந் தொல்வினை நீங்கலின் எம்பிரான் நிலைமை
ஆயுந் தொல்லுணர் வின்றுவந் தெய்திய தவனே
தாயுந் தந்தையுங் குரவனுங் கடவுளுந் தவமும்
ஏயுஞ் செல்வமும் அனையவற் சார்தியா லென்றான். 99

(94. சலம் - தீராக் கோபம். விலங்கல் ஆகியது - மலைவடிவாயது.
96. அனற்கிரி - அக்கினிமலை. அனலகிரி - அருணாசலம்;
திருவண்ணாமலை.
98. பவமும் போகமாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர் -
இருவினையொப்பு வாய்ந்த புனிதர். அவன் அருள்நிலை பாகர் -
சத்திநிபாதத்து உத்தமர். 99. தொல்வினை - பழைய இருவினை.
அவனே - அச்சிவபெருமானே.)

ஆகத் திருவிருத்தம் - 1661
- - -


22. த க் க ன் சி வ பூ சை செ ய் ப ட ல ம்

மருமலர் அயனிவை வகுப்ப நாடியே
புரிகுவன் அ·தெனப் புகன்று தாதைதாள்
பரிவொடு சிறுவிதி பணிந்து காசியாந்
திருநகர் அதனிடைச் சேறல் மேயினான். 1

சென்றனன் காசியில் சிறந்த தொல்மணி
கன்றிகை ஒருபுடை கங்கை வேலையில்
பொன்றிகழ் செஞ்சடைப் புனிதற் காலயம்
ஒன்றுமுன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான். 2

அருளுரு வாகியே அகில மாவிகள்
தருவதுங் கொள்வது மாகித் தாணுவாய்
உருவரு வாகிய ஒப்பில் பேரொளித்
திருவுரு வொன்றினைச் சிவனுக் காக்கினான். 3

நாயகன் மொழிதரு நவையில் ஆகமம்
மேயின முறைதெரி விரத னாகியே
பாய்புனல் புனைசடைப் பரமன் தாள்மலர்
ஆயிரம் யாண்டுகா றருச்சித் தேத்தினான். 4

அருச்சனை புரிதலும் அயன்தன் காதலன்
கருத்துறும் அன்பினைக் கண்டு கண்ணுதல்
பொருக்கென வௌ¤ப்படப் புகழ்ந்து பொன்னுலாந்
திருக்கழல் வணங்கினன் தௌ¤வு பெற்றுளான். 5

அகந்தைய தாகியே ஐய நின்தனை
இகழ்ந்தனன் என்கணே எல்லை யில்பவம்
புகுந்தன அவையெலாம் போக்கி நின்னிடைத்
தகும்பரி சன்பினைத் தருதி யால்என்றான். 6

ஆயவை தொலைத்தளித் தவன்தன் பூசையின்
நேயம தாகியே நிமலன் தன்கண
நாயக இயற்கையை நல்கி வல்லையில்
போயினன் தக்கனும் புனிதன் ஆயினான். 7

வேறு

கங்கைச் சடையான் தனைத்தக்கனக் காசி தன்னில்
அங்கர்ச் சனைசெய் திடப்போந்துழி அம்பு யன்மால்
துங்கத் திமையோர் இறையாவருஞ் சூர மாதர்
சங்கத் தவரு மகவெல்லை தணந்து போனார். 8

போகுற் றவர்கள் அனைவோரும் பொருவில் சீர்த்தி
வாகுற்ற வீரன் சயந்தன்னை வழுத்தித் தங்கட்
காகுற்ற தொல்லைத் தலந்தோறும் அடைந்து மாதோர்
பாகத் தமலன் தனைப்பூசனை பண்ண லுற்றார். 9

ஆரா தனைகள் புரிந்தேஅனை வோரும் எங்கும்
பேரா துநிற்கும் பெருமானருள் பெற்று மெய்யில்
தீராத சின்னங் களுந்தீர்ந்து சிறந்து தத்த
மூரா கியதோர் பதமேவி உறைத லுற்றார். 10

மேதக்க தக்கன் மகந்தன்னில் விரைந்து புக்காங்
கேதத் தடிசில் மிசைந்தேபொருள் யாவும் ஏற்றுப்
பூதத் தரின்மாய்ந் தெழுந்தேதம் புரிகள் தோறும்
பேதைத் தொழில்அந் தணர்யாரும் பெயர்ந்து போனார். 11

என்றிங் கிவைகள் குரவோன்இசைத் திட்டல் கேளா
நன்றென்று சென்னி துளக்குற்று நனிம மகிழ்ந்து
குன்றின் சிறைகொய் தவன்தந்த குரிசில் உள்ளத்
தொன்றுங் கவலை இலனாகிஅவ் வும்ப ருற்றான். 12

(1. மலர் - இங்குத் தாமரை. சிறுவிதி - தக்கன்.
காசியாம் திருநகர் - அழகிய காசிநகர். 2. மணிகன்றிகை - மணிகர்ணிகை.
3. அகிலம் ஆவிகள் - உலகினையும் உயிர்களையும் கொள்வதும் -
அழிப்பதும். திருவுரு ஒன்று - சிவலிங்கம். 4. நாயகன் - சிவன்.
தெரி - தெரிந்த. விரதன் - சிவதீட்சா விதரத்தினையுடையவன்.
6. பவம் - பாவம். 7. கணநாயக இயற்கையை - கணநாதத் தன்மையினை.
8. துங்கத்து - மிகவுயர்ச்சி வாய்ந்த. சூரமாதர் - தேவமாதர்.
9. வாகு வலிமை. வீரன் - வீரபத்திரன்.
10. தீராத சின்னங்கள் - நீங்காத வடுக்கள்.
12. குரவோன் - வியாழ பகவான். குன்றின் சிறை கொயதவன்
தந்தகுரிசில் - இந்திர குமாரனாகிய சயந்தன்.)

ஆகத் திருவிருத்தம் - 1673
- - -


23. க ந் த வி ர த ப் ப ட ல ம்

உரைசெறி மகவான் செம்மல் உம்பரில் இருப்ப இம்பர்
முரசெறி £னை வேந்தன் முசுகுந்தன் என்னும் வள்ளல்
விரைசெறி நீபத் தண்டார் வேலவன் விரதம் போற்றித்
திரைசெறி கடற்பா ராண்ட செயல்முறை விளம்ப லுற்றாம். 1

முந்தொரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன் என்னும்
அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக்
கந்தவேள் விரத மெல்லாங் கட்டுரை பெரியோய் என்ன
மைந்தநீ கேட்டி யென்னா மற்றவை வழாது சொல்வான். 2

எள்ளருஞ் சிறப்பின் மிக்க எழுவகை வாரந் தன்னுள்
வௌ¢ளிநாள் விரதந் தானே விண்ணவர் உலகங் காத்த
வள்ளல்தன் விரத மாகும் மற்றது புரிந்த மேலோர்
உள்ளமேல் நினைந்த வெல்லாம் ஒல்லையின் முடியும் அன்றே. 3

பகிரதன் என்னும் வேந்தன் படைத்தபா ருலகை யெல்லாம்
நிகரறு கோரன் என்னும் நிருதனங் கொருவான் வௌவ
மகவொடு மனையுந் தானும் வனத்திடை வல்லை ஏகிப்
புகரவன் தனது முன்போய்த் தன்குஆஆ புகன்று நின்றான். 4

(1. மகவான் செம்மல் - சயந்தன். இம்பர் - இவ்வுலகம்.
நீபம் - கடம்பு. வேலவன் விரதம் - முருகக் கடவுளுக்குரிய
சஷ்டிவிரதம். 3. எழுவகை வாரந் தன்னுள் - ஞாயிறு முதலிய
ஏழு நாட்களில். வௌ¢ளி நாள் விரதம் - சுக்கிர வார விரதம்.
4. கோரன் என்னும் திருதன் - கோரன் என்னும் அசுரன்.
புகர் - சுக்கிரன்.)

பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல் கேளா
வேற்கரன் மகிழு மாற்றால் வௌ¢ளிநாள் விரதந் தன்னை
நோற்குதி மூன்றி யாண்டு நுங்களுக் கல்லல் செய்த
மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்றான். 5

நன்றென வினவி மன்னன் ஞாயிறு முதலாம் நாளில்
ஒன்றெனும் வௌ¢ளி முற்றும் உணவினைத் துறந்து முன்பின்
சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி
இன்றுயில் அதனை நீத்தி யாண்டுமூன் றளவு நோற்றான். 6

நோற்றிடும் அளவில் ஐயன் நுதியுடைச் செவவேல் வந்து
மாற்றலன் உயிரை யுண்டு வல்லையின் மீண்டு செல்லப்
போற்றியே பகீர தப்பேர்ப் புரவலன் தன்னூ ரெய்தி
ஏற்றதொல் லரக பெற்றான் இன்னுமோர் விரதஞ் சொல்வாம். 7

வாரிச மலர்மேல் வந்த நான்முகன் மதலை யான
நாரத முனிவன் என்போன் உலத்தகு விரத் மாற்றி
ஓரெழு முனிவர் தம்மில் உயர்ந்திடு பதமும் மேலாஞ்
சீரொடு சிறப்பும் எய்தச் சிந்தனை செய்தான் அன்றே. 8

நூற்படு கேள்வி சான்ற நுண்ணிய உணர்வின் மிக்கோன்
பார்ப்பதி உதவு முன்னோன் பதமுறை பணிந்து போற்றி
ஏற்புறு முனிவ ரான எழுவகை யோரில் யானே
மேற்பட விரத மொன்றை விளம்புதி மேலோய் என்றான். 9

முன்னவன் அதததக் கேளா முழுதருள் புரிந்து நோக்கி
அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி
பொன்னடி வழிபா டாற்றிப்பொருவில்கார்த் திகைநாள் நோன்பைப்
பன்னிரு வருடங் காறும் பரிவுடன் புரிதி என்றான். 10

நாரதன் வினவி ஈது நான்புரிந் திடுவன் என்னாப்
பாருல கதனில் வந்து பரணிநாள் அபரா ணத்தில்
ஓர்பொழு துணவு கொண்டே ஒப்பில்கார்த் திகைநாள் தன்னில்
வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்ற லுற்றான். 11

தூசொடு கயத்தின் மூழ்கித் துய்யவெண் கலைகள் சுற்றி
ஆசறு நியம முற்றி ஆன்றமை புலத்த னாகித்
தேசிகன் தனது பாதஞ் சென்னிமேற் கொண்டு செவ்வேள்
பூசனை புரிந்திட் டன்னான் புராணமும் வினவி னானால். 12

(5. ஆசான் - அசுரகுரு. வௌ¢ளிநாள் விரதந்தன்னை மூன்று
யாண்டுநோற்குதி - மூன்று வருடம் சுக்கிரவார விரதந்தனை
அனுட்டிக்கக் கடவாய். 6. வௌ¢ளி முற்றும் - வௌ¢ளிக்கிழமை
முழுவதும். முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் - வியாழனும்
சனியும் ஆகிய இரு தினங்களிலும். திவாவினில் - பகலில் மாத்திரம்.
7. ஐயன் - முருகன். மாற்றலன் - இங்குக் கோரன் என்னும் அசுரன்.
8. வாரிச மலர் - தாமரை மலர். ஓர் எழு முனிவர் - சத்தவிருடிகள்.
9. பார்ப்பதி - பார்வதி. முன்னோன் - விநாயகன்.
மேற்பட - உயர்ந்தோனாக.
10. ஆறு மாமுகத்து நம்பி - சண்முகக்கடவுள்.
கார்த்திகை நாள் நோன்பு - கார்த்திகை விரதம்.
11. பரணி நாள் - பரணி நட்சத்திரம். அபராணத்தில் - பிற்பகலில்.
12. தூசொடு - கட்டிய ஆடையுடன். கயம் - குளம். வெண்கலை - வௌ¢ளை வஸ்திரம்.)

கடிப்புனல் அள்ளித் தன்னோர் கைகவித் துண்டு முக்காற்
படுத்திடு தருப்பை என்னும் பாயலிற் சயனஞ் செய்து
மடக்கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல்
அடித்துணை யுன்னிக் கங்குல் அவதியு முறங்கா துற்றான். 13

அந்தநாள் செல்லப் பின்னர் உரோகிணி யடைந்த காலைச்
சந்தியா நியமம் எல்லாஞ் சடக்னெ முடித்துக் கொண்டு
கந்தவேள் செம்பொற் றண்டைக் கான்முறை வழிபட் டேத்தி
வந்தமா தவர்க ளோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான். 14

பாரணம் விதியிற் செய்தோன் பகற்பொழு துறங்கு மாயின்
ஆரண மறையோர் தம்மில் ஐம்பதிற் றிருவர் தம்மைக்
காரண மின்றிக் கொன்ற கடும்பழி யெய்தும் என்னா
நாரதன் மாயம் வல்லோன் இமைத்திலன் நயனஞ் சற்றும். 15

விழியொடும் இமைகூ டாமே வெய்யவன் குடபால் வீழும்
பொழுதள விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி
அழிவறு விரதம் இவ்வாறு ஆறிரு வருட மாற்றி
எழுவகை முனிவோ ருக்கும் ஏற்றமாம் பதத்தைப் பெற்றான். 16

இந்தநல் விரதந் தன்னை ஈண்டொரு மறையோன் நோற்று
முந்திய மனுவே யாகி முழுதுல கதனை ஆண்டான்
அந்தணன் ஒருவன் பின்னும் அவ்விர தத்தைப் போற்றிச்
சிந்தையின் நினைந்தாங் கெய்தித் திரிசங்கு வாகி யுற்றான். 17

ஈங்கொரு மன்னன் வேடன் இருவரும் நோற்று வண்மை
தாங்கிய அந்தி மானே சந்திமான் என்று பேராய்
வீங்குநீர் உடுத்த பாரை மேலைநாட் புரந்தார் என்ப
ஆங்கவர் பின்னாள் முத்தி அடைவது திண்ணம் அம்மா. 18

இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று
முப்புவ னத்தின் வேண்டும் முறைமையை யடைந்த நீரார்
மெய்ப்படு தொகையை யாரே விளம்புவர் ஈதே யன்றி
ஒப்பரும் விரதம் வேறும் ஒன்றுள துரைப்பக் கேண்மோ. 19

வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேற் செங்கை
அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாருஞ்
சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில்
முற்பக லாதி யாக மூவிரு வைகல் நோற்றார். 20

(13. மறலியா மதித்து - யமனாகக் கருதி. உன்னி - நினைத்து.
14. பாரணம் - விரத முடிவில் உண்ணுதல்.
15. ஐம்பதிற்று இருவர் - நூறுபேர். கடும் பழி - கொடிய பழி.
16. குடபால் - மேற்கு. ஆறு இரு வருடம் - பன்னிரண்டு வருடம்.
17. இந்த நல் விரதம் - நல்ல இக் கார்த்திகை விரதம்.
19. ஆரல் நாள் - கார்த்திகை நாள்.
20. வெற்பு - கிரவுஞ்ச மலை. அவுணன் - தாரகன்.
துலையின் திங்கள் - ஐப்பசிமாதம். முற்பகல் ஆதியாக
மூவிரு வைகல் - பிரதமை முதலாக ஆறுதினம்.)

முந்திய வைக லாதி மூவிரு நாளுங் காலை
அந்தமில் புனலின் மூழ்கி ஆடையோ ரிரண்டு தாங்கிச்
சந்தியிற் கடன்கள் செய்து தம்பவிம் பங்கும் பத்திற்
கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குற் போதில். 21

நிறைதரு கட்டி கூட்டி நெய்யினாற் சமைக்கப் பட்ட
குறைதவிர் மோத கத்தைக் குமரநா யகற்க ருத்திப்
பிறவுள விதியுஞ் செய்து பிரான்திருப் புகழ்வி னாவி
உறுபுனல் சிறிது மாந்தி உபவசித் திருந்தார் மாதோ. 22

ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை யாற்றிப்
பாரணம் விதியிற் செய்தார் பயிற்றுமிவ் விரதந் தன்னால்
தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார். 23

என்றிவை குரவன் செப்ப இறையவன் வினவி எந்தாய்
நன்றிவை புரிவன் என்னா நனிபெரு வேட்கை யெய்தி
அன்றுதொட் டெண்ணில் காலம் அவ்விர தங்கள் ஆற்றிக்
குன்றெறி நுதிவேல் ஐயன் குரைகழல் உன்னி நோற்றான். 24

வேறு

ஆன காலையில் ஆறுமா முகமுடை அமலன்
கோன வன்தனக் கருளுவான் மஞ்ஞைமேல் கொண்டு
தானை வீரனும் எண்மரும் இலக்கருஞ் சார
வானு ளோர்களுங்கணங்களுஞ் சூழ்வுற வந்தான். 25

வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து
கந்த வேளடி பணிந்தனன் கைதொழூஉப் பரவ
அந்த மில்பகல் விரதங்கள் ஆற்றினை அதனால்
எந்த நல்வரம் வேண்டினை அதுபுகல் என்றான். 26

என்ற காலையில் முசுமுக முடையவன் எந்தாய்
நன்று பாரெலா மெனதுசெங் கோலிடை நடப்பான்
வென்றி மொய்ம்பினன் ஆதியாம் வீரரை யெல்லாம்
ஒன்று கேண்மையின் துணைவராத் தருதியென் றுரைத்தான். 27

மன்னன் இவ்வஆஆ வேண்டுகோள் வினவுறா வள்ளல்
அன்ன வாறுனக் குதவுவ மென்றருள் புரிந்து
மின்னல் வாட்படை வீரமொய்ம் பன்முதல் விளம்புந்
துன்னு தானையந் தலைவரை நோக்கியே சொல்வான். 28

நோற்றல் கூடிய முசுகுந்தன் நும்மினும் எம்பால்
ஏற்ற மேதகும் அன்பினான் எழுகடற் புவியும்
போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய்
ஆற்றல் சான்றிடு துணைவராய் இருத்திர்என் றறைந்தான். 29

(21. தம்பம் - அக்கினி. பிம்பம் - உருவம். கும்பம் - கலசம்.
22. கட்டி - வெல்லக்கட்டி. திருப்புகழ் - அழகிய புகழ்.
வினாவி - கேட்டு. 23. ஆரணம் - வேதம்.
அதன் மற்றை வைகல் - அந்தச் சஷ்டியின் மறுதினம்.
24. குரவன் - இங்கு வசிட்டன். இறையவன் - முசுகுந்தன்.
25. மஞ்ஞை - மயில். தானை வீரன் - வீரவாகு.
26. அந்தமில் பகல் - அளவற்றகாலம்.
27. முசுமுகமுடையவன் - குரங்கின் முகத்தினையுடைய முசுகுந்த மன்னன்.
29. நோற்றல் கூடிய - சஷ்டி விரதத்தை நோற்று முற்றுப்பெற்ற.)


வேறு

முழுதருட் புரிதருங் கடவுள்சொல் வினவியே முடிவ தில்லாச்
செழுமதித் தண்குடைச் சூர்குலந் தனையடுந் திறலி னேங்கள்
பழிபடப் பானுவின் வழிவருஞ் சிறுமகன் பாங்க ராகி
இழிதொழில் புரிகிலோ மெனமறுத் துரைசெய்தார் யாரும்வீரர். 30

ஞானநா யகனவர் மொழிதனைத் தேர்ந்துநம் முரைம றுத்தீர்
ஆனதோர் பான்மையால் நீவிர்மா னுடவராய் அவனி மன்னன்
சேனையா கிப்புறம் போற்றியே பற்பகற் சேர்திர் பின்னர்
வானுளோர் புகழவே நோற்றுநம் பக்கலில் வருதி ரென்றான். 31

ஐயன்வான் மொழியினால் வீரமொய்ம் புடையவ னாதி யானோர்
மையல்மா னுடவராய்த் தொல்லைநா ளுடையதோர் வன்மை நீங்கி
மெய்யெலாம் வியர்வுறப் பதைபதைத் தேங்கியே விழும மிக்குப்
பொய்யரேம் பிழைபொறுத் தருடியா லென்றுபொன் னடிப ணிந்தார். 32

கமலமார் செய்யசே வடியின்மேற் றாழ்ந்துகை தொழுது போற்றிக்
குமரவேள் விடைதனைப் பெற்றுமா னவரெலாங் கொற்ற மன்னன்
தமர்களாய் ஒழுகினார் நேமியம் படையுடைத் தரும மூர்த்தி
அமரர்கோன் இளவலாய் ஆங்கவன் பின்செலும் அமைதி யேபோல்.33

ஆயதோர் காலையின் முசுமுகத் திறையவன் ஆடல் வேற்கை
நாயகன் பொற்பதம் வந்தியா நிற்பநல் லருள்பு ரிந்தே
பாயபொன் சுடர்மணித் தோகையம் புரவியும் படைக ளாகும்
மாயிரும் பூதருந் தானும்அந் நிலைதனில் மறைத லுற்றான். 34

வேறு

மறைந்தனன் குமரன் ஏக மன்னவன் மகிழ்ச்சி கொண்டு
சிறந்திடு கருவூர் என்னுந் திருநகர் அரசின் மேவி
அறந்தரு மாட வீதி அளப்பில புரிவித் தாங்கே
நிறைந்திடு வீரர் தம்மை நிலைபெற இருத்தி னானே. 35

ஆயவர் தங்கட் கெல்லாம் அரும்பெறல் ஆக்க முள்ள
தேயமுங் கரிதேர் வாசித் திரள்களும் வரிசை முற்றுந்
தூயபல் சனங்க ளாகுந் தொகுதியும் உதவித் தண்ட
நாயக முதல்வ ராக நல்கினன் ஞால மன்னன். 36

அன்னதோர் காலந் தன்னில் அரம்பையர் அவனி யாளும்
மன்னவர் தம்பால் தோன்றி வளர்தலும் வாகை மொய்ம்பின்
முன்னவன் முதலோர்க் கெல்லாம் முசுகுந்த வேந்தன் அந்தக்
கன்னியர் தம்மைக் கூவிக் கடிமணம் இயற்று வித்தான். 37

(30. சூர்குலம் - சூரபன்மனுடைய குலம்.
பானுவின் வழிவரு சிறு மகன் - சூரியகுலத்தில் தோன்றிய முசுகுந்தன்.
31. ஞான நாயகன் - முருகக் கடவுள். 33. மானவர் - வீரர்.
தமர் - நண்பர். அமரர்கோன் இளவல் - உபேந்திரன்.
35. வீரர்தம்மை - நவவீரர் ஆதியரை.
37. வாகை மொய்ம்பின் முன்னவன் - வீரவாகுதேவன்.)

அந்தமில் வன்மை சான்ற ஆடலம் புயத்தோன் புட்ப
கந்தியென் றுரைபெற் றுள்ள கன்னிகை தன்னை வேட்டுச்
சிந்தையின் மகிழ்வால் சேர்ந்து சித்திர வல்லி யென்னும்
பைந்தொடி தன்னை அன்பால் பயந்தனன் பதும மின்போல். 38

அத்தகு பொழுதில் பன்னை அனகனே சனகன் என்னும்
புத்திரர் தம்மை நல்கிப் புவனியாள் முசுகுந் தற்குச்
சித்திர வல்லி யென்னுஞ் சீர்கெழு புதல்வி தன்னை
மெய்த்தகு வதுவை நீரால் விதிமுறை வழாமல் ஈந்தான். 39

ஏனைய வீரர் தாமும் இயல்புளி வழாமல் வேட்ட
தேனிவர் குழலா ரோடுஞ் சிறந்தஇல் வாழ்க்கை போற்றிப்
பானலங் குதலைச் செவ்வாய்ப் பாலரை நீல வேற்கண்
மானனை யாரை நல்கி மனுகுலத் தொன்றி உற்றார். 40

சித்திர வல்லி யென்னுஞ் சீருடைச் செல்வி ஆங்கோர்
தத்தையை வளர்த்த லோடுந் தண்டகத் தருமன் தேவி
அத்தனிக் கிளியை வெ·க ஆங்கவன் தூதர் போந்து
கைத்தலத் ததனைப் பற்றிக் கடிதினில் கொடுபோய் ஈந்தார். 41

பெரியக்கா

வருடத்தில்ஏதாவது ஒரு முழுநிலவு நாளில் நாங்கள் குடும்பமாக மண்டலாய்ப் பிள்ளையார் கோவிலில் இருப்போம்.ஈச்சை மரங்கள், பாலை மரங்கள் என பலவித பழ மரங்களும் செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் காடு. அதன் நடுவே பிள்ளையார் கோவில். மற்றைய கோவில்களைப் போலல்லாது இங்கு பிள்ளையார் மேற்கே பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் தங்குவதற்காக மண்டபங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே போனால் கிழக்குப் புறமாக உள்ள மண்டபத்தில்தான் தங்குவோம்.எனது பாட்டனார் காலத்தில் இருந்தே மண்டலாய்க்குப் போய் ஒரு நாள் தங்கியிருந்து மண்டகப்படி செய்து அன்னதானம் வழங்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இரவில்தான் பூசை நடக்கும். காடுகளில் பகல் முழுக்கத் தேடி எடுத்து வந்த காய்ந்த மரங்களை மண்டபத்துக்கு முன்னால் போட்டு எரித்து, அதில் குளிர் காய்ந்த படியே முழுநிலவில் பூசைச் சோற்றை அம்மா குழைத்துத் தர கைகளில் வாங்கி சாப்பிடும் போது இருக்கும் ருசியே தனி.


More here....

Saturday, June 17, 2006

MALAYSIA:Temple Demolitions Spell Creeping Islamisation

KUALA LUMPUR, Jun 1 (IPS) - "Why do they have to tear down our temples," asked A. Kanagamah, a hospital worker. Tears streamed down her cheeks as city hall workers, protected by police in riot gear, demolished a 107-year-old Hindu temple in the city mid-May

Hundreds of worshippers watched in horror as the workers, mostly Muslims, brought down the roof, pushed down the walls and smashed the deities that immigrant Indian workers had brought with them from South India to provide solace in a strange new land.

"We are poor and our only comfort is our temples and now we are losing that also," Kanagamah said in Tamil, the language spoken by ethnic Indians who form eight percent of Malaysia's 26 million people and mostly follow Hinduism.

Indians are economically backward and politically weak compared to Malays who comprise 50 percent of the population and dominate decision making at every level. Ethnic Chinese, who make up another 24 percent, enjoy economic clout and dominate business activity.

Over the years, local authorities have been regularly demolishing temples saying the structures were built illegally. Most were small wayside shrines.

However, in recent years, several large 100-year-old temples, built during the British colonial era, were demolished not just because they stood in the way of development but simply because they were classified as "illegal structures."

It is now a common sight to see bulldozers reducing large temples to rubble and workers to smashing deities before the eyes of helpless worshippers.

"The demolitions are indiscriminate, unlawful and against all constitutional guarantees of freedom of worship," human rights lawyer P. Uthayakumar told IPS.

He said temples are demolished by the local authorities as illegal structures but the same authorities make it impossible for devotees to get a permit.

He cited the case of a Catholic church in nearby Shah Alam city which got a permit to build a church after 30 years of trying. "What does this say about freedom of worship?" he asked.

After months of suffering in silence, Hindus and others protested outside city hall this week. The protesters, including woman and children, carried placards, chanted mantras and prayers, burned incense and broke a coconut.

Lawyers, human rights activists and opposition party leaders also joined the protest.

"There appeared to be an unofficial policy of Hindu temple-cleansing in Malaysia in recent months," said P. Waytha Moorthy, chairman of the Hindu Rights Action Force, a coalition of about 50 Hindu organisations.

"Nine temples have been torn down in the last three months," he said blaming overzealous Muslim officials for the destruction. "We are worried Hindus will turn violent," he told IPS.

Hindu temples were built by migrant workers on private or abandoned land that were later acquired by local and state authorities. These temples mainly serve devotees from the lower income group, said Moorthy. "The labourers are poor, politically weak and unable to take legal action to protect their temples or fight off the authorities.''

Moorthy argued that temple demolition was against Article 11 of the federal constitution that guarantees freedom of religion. "It is also a blatant criminal offence under section 295 of the penal code that makes any act that injures or defiles a place of worship a serious offence," he said.

The protestors have submitted a petition to Prime Minister Abdullah Badawi urging him to issue a firm directive to all federal, state and local authorities to stop the demolition of Hindu temples. However, similar appeals, made earlier, were ignored and scant action taken.

The demolitions have angered not just Hindus but individuals of other faith who see it as a violation of basic human rights.

"This way of (demolishing) is brutal and makes Hindus angry," said Dr Sanusi Osman, an academic and senior leader in the National Justice Party (NJP) of opposition icon Anwar Ibrahim. "The authorities should interact with worshipers, draw-up proper guidelines and provide alternative sites before tearing down temples," he told IPS.

It is not only temples that are coming down in increasingly intolerant Malaysia.

A country that once boasted an open and tolerant multi-ethnic society s now under siege by a dangerous mixture of Islamic fundamentalism and Malay ethno-nationalism. Racial, religious and cultural intolerance is becoming an everyday phenomenon.

For instance some local authorities want to prosecute couples for holding hands in public because they see it as ‘un-Islamic'.

Around Christmas, last year, authorities demolished a church belonging to the indigenous Orang Asli community, on the grounds that it had no permit.

The police recently ordered non-Muslim policewomen to wear the ‘tudung' or Muslim headscarves. Some local authorities even want to ban or restrict dog ownership because conservative Muslims consider dogs to be ritually unclean animals.

On May 14 about 500 Muslims stormed and disrupted a forum by lawyers and others entitled ‘Federal Constitution - Protection for All', called to discuss the rights of religious minorities against encroachment by Islamic Shariah laws.

Scores of police personnel who were present at the forum did not stop or arrest the trouble makers but instead forced the organisers to cancel the forum.

''Non-Muslims increasingly feel alien in their country of birth," said Tian Chua, a senior leader in the opposition Peoples Justice Party told IPS. "Unlike before, under Prime Minister Abdullah, there is an increasing tendency for Malays to rally around Islam -- it is a worrying trend."

"There's a creeping Islamisation in our society and this poses a danger to our secular, multi-religious and multi-racial country," said opposition leader Lim Kit Siang. "The destruction of any place of worship is unacceptable -- the government of Prime Minister Abdullah Badawi must urgently intervene.''

Islamic fundamentalism has its roots in the competition between the ruling and moderately Islamic United Mlaya National Organisation (UMNO) and its traditional rival, the Pan Malaysia Islamic Party or PAS.

Each have tried to out do the other as the champion of Islam. Their competition and rivalry continues to the detriment of tolerance and secularism.

The architect of Malaysia's pro-Islamic drive, while serving as deputy prime minister, Anwar Ibrahim says he only advocated the adoption of Islamic values in government and the civil service and not the "Arabisation" of Malaysian society.

''I myself am worried about the direction of the country," Anwar said at a recent forum on the topic. "Our leaders are failing us. We need strong and committed leadership to arrest the decline." (END/2006)

---

http://www.ipsnews.net/news.asp?idnews=33451

Saturday, May 27, 2006

இந்தோனேஷியாவில் பூகம்பம் 3000கும் அதிகமானவர் சாவு

3,000 dead in Indonesia quake

AGENCIES May 27, 2006 14:29 IST


A powerful earthquake flattened buildings in central Indonesia?on Saturday, killing at least 3,000 people and injuring thousands more in the country's worst disaster since the 2004 tsunami.

The magnitude 6.2 quake struck at 5.54 am local time near the ancient city of Yogyakarta as many people slept, causing death and damage in many nearby towns.

Sixteen hours after the quake struck, the number of dead stood at 3,068, Social Affairs Ministry official Sopar Jaya
said adding, that two-thirds of the fatalities occurred in devastated Bantul.

President Susilo Bambang Yudhoyono ordered the army to help evacuate victims and arrived in densely populated Central Java province on Saturday afternoon with a team of Cabinet ministers to oversee rescue operations.


ரீடிப்.காம்

Wednesday, May 24, 2006

Mohammed's Picx - முகம்மது படங்கல்(2)





These and more pictures at :-

http://www.zombietime.com/mohammed_image_archive/extreme_mohammed/

Mohammed's Picx - முகம்மது படங்கல்







Sunday, May 21, 2006

சவுதி அரேபியர் இணையத்தில் என்ன செய்கிறார்கள்?

Most of Kingdom’s Internet Users Aim for the Forbidden
Raid Qusti, Arab News

RIYADH, 2 October 2005 — Of the estimated 2.2 million Internet users in the Kingdom, the majority regularly try to access forbidden or indecent material, Arab News has learned.

“Of those who log on to the Internet, 92.5 percent are trying to access a website that, for one reason or another, has been blocked,” said Dr. Mishaal Al-Kadhi, acting general manager of the King Abdul Aziz City for Science and Technology (KACST).

KACST is not only the Internet gateway for the Kingdom but also acts as a filter for unsuitable material. The official said that pornographic material was one of the main items on the city’s “black list” which also includes gambling, terrorism and politics as well as anything contrary to Islamic beliefs.

He said that since the royal decree was issued in 1998 choosing KACST as the gateway for the Internet in the Kingdom and authorizing it to act as a filter, a special committee had been set up to decide what should and should not be inaccessible.

“A permanent security panel was established for this purpose. It consisted of members from 10 ministries, headed by the Interior Ministry,” he explained. A year after the panel’s establishment, 85 percent of the material on the blocked sites was pornographic with the remaining being what was deemed “inappropriate” for the Kingdom.

Asked why he thought many of those who access the web in the Kingdom were looking for pornography, Al-Kadhi said that he did not believe the Kingdom was any different from other nations in the world regarding this phenomenon. He went on to note, however, that a new dangerous tendency has begun to sweep the Internet: People “have shifted from pornography to pedophilia.”

He said that according to statistics from different countries around the world, there had been a global increase in the demand for pedophilia on the Internet.

“Pedophilia has become a major problem in many countries. In Germany alone there are 30,000 people addicted to pedophilia and 20,000 others who are its victims. There is even a nationwide campaign there that asks people, ‘Do you like children too much?’” he said. He said that there was a similar problem in Italy too.

Al-Kadhi said that according to a Swedish official responsible for filtering the Internet there, “after Sweden passed new laws in the year 2000 aimed at preventing people from having sex with children, many had turned to their pets.”

He said that these bizarre sexual preferences were being fought by the European Union with new legislation. “The governments of many European countries are now using ‘safer Internet’ from which this kind of material is filtered.”

He pointed out that many committees were trying to increase public awareness of the phenomenon. “We (officials in Saudi Arabia) feel justified since we blocked this kind of thing from the very beginning and will continue to do so,” he said.

Al-Kadhi said that KASCT had received the Asia Pacific Information and Technology Award for providing the best software to block adult sites.

The system uses “Robots,” a program that automatically blocks certain phrases on an adult website and has an accuracy of 99.9 percent, he said.

Asked about the blocking of sites that promote terrorism, he said that KACST works only as a technical agency and that it blocks such sites when it receives an order to do so from the Interior Ministry.

He explained that KASCT did not screen personal e-mails and would not do so unless it received a request relating to national security from the ministry.

Commenting on the blocking of websites which would permit Internet users to access information about other religions such as Buddhism, Judaism and Christianity, the official said that there were no laws to ban those sites but that KACST naturally made mistakes like any other group or organization.

He said KACST had ignored requests from many people to block all religious sites except for Islamic ones. Any person, he added, may fill out a request concerning a blocked URL and send it to KACST, mentioning the reasons why the site should not be blocked.

“The request is reviewed within 24 hours,” Al-Kadhi added. He said KACST was not to blame for the slow Internet dial-up connections in the Kingdom, adding that the problem was with the Saudi Telecom Company lines.


பார்க்க,படிக்க: http://www.arabnews.com/?page=1&section=0&article=71012&d=2&m=10&y=2005


So much so for their islamic puritanism!!

Friday, May 19, 2006

பெரோஸ்கானை தடை செய்தது பாகிஸ்தான்

Musharraf bans Feroze Khan's entry into Pak

ISLAMABAD, MAY 18 (PTI)


Upset over his reported remarks criticising Pakistan during his recent visit, President Pervez Musharraf has banned veteran Bollywood actor Feroze Khan from entering the country.

"He (Khan) has misbehaved, abused our hospitality which was not acceptable, therefore he is barred from entering Pakistan," Foreign Office spokesperson Tasnim Aslam told PTI today.

"The President House has taken serious notice of his remarks which were widely covered in the Indian and Pakistani media and directed the concerned authorities to blacklist him and impose a ban on his entry into Pakistan," private ARY channel reported quoting sources in the Presidency.

It said the President's decision has been communicated to the Pakistan High Commission in New Delhi.

The 67-year-old actor, during his visit to Pakistan last month for the premiere of his brother Akbar Khan's film 'Taj Mahal', had reportedly made the comments in Lahore on April 26 highlighting comfort levels of Muslims in India in comparison to that in Pakistan, setting off a heated verbal exchange between him and local compere Fakher-e-Alam, and trigerring a controversy here.

"I am a proud Indian. India is a secular country. Muslims there are making a lot of progress. Our President is a Muslim, Prime Minister a Sikh. Pakistan was made in the name of Islam but look how the Muslims are killing each other," he was quoted as saying by a Pakistani daily last month.

Soon after airing Musharraf's orders banning Khan's entry, local Geo TV telecast a cartoon video titled 'Feroze Khan, Fakhar-e-Hindustan' depicting him in an inebriated condition.

Ever since the controversy erupted, Fakher-e-Alam, also a pop singer, has been appearing in Pakistani TV channels accusing Khan of insulting and hurting Pakistan's pride in an inebriated state.

Many Pakistani film stars and producers have objected to Khan using the platform of his brother's film's premiere to make "controversial remarks," but they have also been pleading that this was an isolated incident which should not be allowed to spoil the unprecedented friendly ties evolving between the two countries.

Alam himself has been a frequent visitor to India and regularly interviewed Bollywood stars for Pakistani TV channels.

After the Pakistan government gave permission to screen 'Taj Mahal' and new print of 'Mughal-e-Azam', expectations were high that Islamabad would lift the four-decade-old ban on Indian films. But there are apprehensions here that the Feroze Khan episode was being played up by opponents of the peace process to spoil the friendly relations.

The other Indian film stars and delegates accompanying Khan to the premiere of 'Taj Mahal' had reportedly apologised to Alam for the incident.


பார்க்க, படிக்க : http://www.outlookindia.com/pti_news.asp?id=381064

தமிழ்நாடு செய்தி - காங்கிரஸ் அரசில் சேர விரும்புகிறதாம்.

Congress wants to join DMK-led govt


Chennai, May 19: The Tamil Nadu Congress Legislature Party today unanimously resolved to join the Tamil Nadu Cabinet in the interest of stability of the state government and to fulfil the expectations of the people.


The AICC observer in charge of Tamil Nadu, Veerappa Moily, said after the hour-long CLP meeting that the resolution would be forwarded to Congress president Sonia Gandhi for appropriate action. "We expect the DMK president and Chief Minister M Karunanidhi to discuss the matter with Sonia Gandhi when he visits Delhi shortly," Moily told chennaionline shortly after the CLP meeting.


Moily said he had already broached the subject with Karunanidhi soon after the announcement of election results in the state. "I had discussed the matter informally with Mr Karunanidhi even then but I did not share the information with the media," Moily said with a smile adding that he had also conveyed to Sonia Gandhi the wishes of the partymen in the state to join the government.


"Soon after the election results, a number of Congressmen in the state did speak to me about their desire that the Congress should join the government. I have duly conveyed this both to Mr Karunanidhi and to the Congress president. I expect that the two leaders will discuss the matter further when the Chief Minister visits Delhi shortly," Moily added.


Asked if there were any riders or conditions to the decision of the Congress to support the DMK-led government in the state, Moily said there was absolutely no question of any condition to the decision of the Congress to support the government in the state. "Our support to the government here is absolutely unconditional. We are a dignified national party. We don't put conditions to our support. All that we have done is to merely express our desire to join the government. It is for the leaders concerned to take the matter forward. Our support to the government is total and without any condition whatsoever."


Moily also disclosed that the Congress believed that the other poll partners also can join the government. "We would like all the poll partners to join the government. Our desire to join the government is not made out of a selfish motive. We want others also to be there."


The party was also in favour of evolving a Common Minimum Programme (CMP) as has been done by the UPA at the Centre, Moily added.


On the election results, Moily expressed happiness over the performance of the Congress in Tamil Nadu. "Our percentage of victories as compared to the number of seats contested is among the highest in the state," Moily pointed out.


The resolution adopted by the CLP today said, "Resolves to respond to the wishes of the people of Tamil Nadu to strengthen DPA for the full term. CLP is also of the conviction that in the interest of stability of the government and also to fulfil the expectations of people of Tamil Nadu, other partners of DPA join hands with the government associating with the Cabinet and its various functions. It is also resolved to have a Common Minimum Programme on the lines of UPA. It is of the firm conviction that mandate of the people of Tamil Nadu is for DPA government led by Dr Kalaignar Karunanidhi. The matter may be taken up with Smt Sonia Gandhiji, the Congress president."


Earlier, the CLP meeting unanimously resolved to elect the senior MLA, D Sudarsanam, as the CLP leader in Tamil Nadu. The filling up of other posts like deputy leader, whip, secretary and joint secretary would be taken up later in consultation with the CLP leader and PCC president M Krishnaswamy, Moily said. (R Rangaraj)


படித்தது :

சென்னை ஆன்லைன்

சோதனை

சோதிக்கின்றேன்....